இலங்கை – சீனாவுக்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

296

எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் பெய்ஜிங் இடையே விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

சீனாவின் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டதையடுத்து, ஷங்காய், பெய்ஜிங் மற்றும் குவாங்சூ ஆகிய நகரங்களுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது

அதன்படி, ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று முறை வணிக விமானங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கொழும்பில் இருந்து ஷங்காய்க்கும், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஷங்காயிலிருந்து கொழும்புக்கும் விமான சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here