பெப்ரவரியில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

375

பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 26,506 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்த வருடத்தில் கடந்த 07 ஆம் திகதி வரை வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 129,051 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 120,545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 25 சதவீதமானவர்கள் ரஷ்யர்கள் எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here