follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதபால் மூல வாக்கெடுப்பு 22-23-24…

தபால் மூல வாக்கெடுப்பு 22-23-24…

Published on

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 22,23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை தபால் மூல வாக்களிப்பிற்கு சுமார் எட்டு இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தபால் வாக்குகள் அடங்கிய முன்பதிவு செய்யப்பட்ட பொதிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் கையளிக்கப்படவுள்ளதாகவும், உத்தியோகப்பூர்வ வாக்காளர் அடையாள அட்டை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

339 உள்ளுர் அதிகாரசபைகளுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை அங்கீகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 339 சுயேட்சை குழுக்கள் ஊடாக 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள்.

காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபை, அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை ஆகிய தேர்தல் தொகுதிகளை தவிர்த்து நாடளாவிய ரீதியில் உள்ள 339 உள்ளுர் அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பை நடத்தும் பணிகளை 24 மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...