follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉலகம்கடும் குளிருக்கு மத்தியில் 100 மணிநேரம் கடந்த நிவாரணப் பணிகள்

கடும் குளிருக்கு மத்தியில் 100 மணிநேரம் கடந்த நிவாரணப் பணிகள்

Published on

துருக்கியில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தொடங்கிய நிவாரணப் பணிகள் தற்போது நூறு மணிநேரத்தை தாண்டிவிட்டன. ஆனால் இதுவரை நிவாரணப் பணிகள் முடிக்கப்படவில்லை.

எனினும் சுமார் 100 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நிவாரணப் பணிகளில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல். வாகனங்கள் இல்லாததாலும், சாலைகள் சேதமடைந்ததாலும், நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000-ஐ தாண்டியுள்ளது. ஆனால், இதுவே இறுதிப் புள்ளி விவரமாக இருக்காது என்று நிவாரணப் பணியாளர்களும் கூறுகின்றனர். எனினும், கடும் குளிரான காலநிலை காரணமாக நிவாரணப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம், தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் மற்றுமொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை “நூற்றாண்டின் பேரழிவு” என்று அந்நாட்டு ஜனாதிபதி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...