follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஇன்று முதல் மிருகக்காட்சிச்சாலையில் சிறப்பு நிகழ்ச்சி ஆரம்பம்

இன்று முதல் மிருகக்காட்சிச்சாலையில் சிறப்பு நிகழ்ச்சி ஆரம்பம்

Published on

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிச்சாலையின் ‘விலங்குகளுடன் பாசம் கொண்ட வாரம்’ ‘Week of Affection for Animals’ இன்று (11) ஆரம்பமாகிறது.

விலங்குகளுக்கு அன்பையும் கருணையையும் வழங்கும் நோக்கில் இந்த வாரம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய விலங்கியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வாரத்தில் பார்வையாளர்கள் விலங்குகளுக்கு உணவளிக்கும் வாய்ப்பும் வழங்கப்படவுள்ளதுடன், விலங்குகளுடன் புகைப்படம் எடுக்க பிரத்தியேக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வாரத்தில், தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கு வருடத்துக்கு பல தடவைகள் வருகை தரும் பார்வையாளர்களுக்கு விஷேட அங்கத்துவ அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...