உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்குப்பதிவு செயல்முறைக்கான சிறப்பு வழிமுறைகளை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்கட்டை அடங்கிய பாதுகாப்பு பொதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 19ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.