follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபீற்றர் ரம்ஸோர் இலங்கை விஜயம்

பீற்றர் ரம்ஸோர் இலங்கை விஜயம்

Published on

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பீற்றர் ரம்ஸோர் உயர்மட்ட சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக இன்று நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.

ஜேர்மன் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழுவில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அறிக்கையாளராகப் பதவிவகிக்கும் பீற்றர் ரம்ஸோரின் வருகை இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகளை வலுப்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகின்றது.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹொல்கர் சீபேற்றுடன் இணைந்து அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நிகழ்த்தவுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையிலான நீண்டகாலத்தொடர்பைப் புலப்படுத்தும் வெற்றிகரமான செயற்திட்டங்களில் ஒன்றான மொரட்டுவையில் அமைந்துள்ள சிலோன் ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்திற்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அத்தோடு ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் காலியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...