follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடு"ரணில் இருக்கும் வரை தேர்தல் இல்லை"

“ரணில் இருக்கும் வரை தேர்தல் இல்லை”

Published on

தபால் மூல வாக்களிப்பை பிற்போடுவது தேர்தலை அறிவித்ததன் பின்னர் ஜனநாயகத்தின் மீதான அரசாங்கத்தின் முதல் துப்பாக்கிச் சூடு என சுதந்திர மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தேர்தலை பிற்போடுவதனால் ஜனாதிபதித் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ நடத்தப்படாது என சுதந்திர மக்கள் முன்னணியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் தேர்தலுக்கு பணமில்லை என்று கூறினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிருடன் இருக்கும் வரை தேர்தலே கிடையாது என சுதந்திர மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குத் தேவையான அனைத்துப் பத்திரங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்கான தேர்தல் பத்திரங்கள் பல மாவட்டங்களில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...