follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடு"மக்களுடன் இணைந்து போராடவும் தயார்" - சுதந்திரக் கட்சி

“மக்களுடன் இணைந்து போராடவும் தயார்” – சுதந்திரக் கட்சி

Published on

தபால் மூல வாக்களிப்பை பிற்போடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு கட்சி என்ற ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் அக்கட்சி நடத்தும் தொடர் பேரணிகள் ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தொடர் போராட்டமாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால், ஜனநாயக வாக்களிக்கும் உரிமையை வென்றெடுப்பதற்காக மக்களுடன் இணைந்து போராடவும் தயங்கப் போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான ஜனநாயக உரிமை மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...