follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுவாக்களிப்பு ஒடுக்குமுறை மற்றும் பொது அதிகாரத்திற்கு எதிராக பல வழக்குகள் - பெப்ரல்

வாக்களிப்பு ஒடுக்குமுறை மற்றும் பொது அதிகாரத்திற்கு எதிராக பல வழக்குகள் – பெப்ரல்

Published on

நிதி பிரச்சினை காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராக அரசாங்கம் குரல் எழுப்ப வேண்டும், நிதி காரணிகளின் அடிப்படையில் மட்டுமே தேர்தலை ஒத்திவைக்க அனுமதித்தமை ஜனநாயகத்தின் அடிப்படை வரம்புகளை மீறுவதற்கு சட்டம் ஒரு முன்னுதாரணமாகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிந்தாலும், இலங்கையில் வழக்குகள் நடைபெற்று வரும் நேரத்தைப் பார்க்கும்போது, ​​அது வீண் நடவடிக்கையாகத் தோன்றினாலும், இந்த பலாத்கார நடவடிக்கைக்கு எதிராக பல வழக்குகளைத் தாக்கல் செய்வதன் மூலம் அரசாங்கத்தின், கவனத்தை ஈர்க்க முடியுமாக உள்ளதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் கூறினார்.

பண விவகாரத்தில் முடிவெடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், எதிர்கால தேர்தல்களில் பாதகமான சூழ்நிலையை உருவாக்காமல் இருக்க எதிர்க்கட்சிகள் உறுதி எடுக்க வேண்டும் என்றார்.

நிர்ணயிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு மாத்திரம் பணம் செலவழிக்க வேண்டும் என அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்துள்ளதையடுத்து, பட்டியலில் இல்லாத விடயங்களுக்கு செலவு செய்வதற்கு அரச அதிகாரிகள் அஞ்சுவதைப் புரிந்து கொள்ளமுடியும் எனவும் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தேர்தலின் போது முற்பணத்தை விடுவித்தல், அச்சடித்தல் போன்றன மேற்கொள்ளப்படும் என தெரிவித்த ரோஹன ஹெட்டியாராச்சி, இம்முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகின்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...