follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12 மணிநேரம் நீர்வெட்டு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12 மணிநேரம் நீர்வெட்டு

Published on

வத்தளை உட்பட பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி வத்தளை, ஹெந்தல, அல்விஸ் டவுன், வெலிக்கட முல்லை, கெரவலபிட்டிய, மாபோல, நாயக்கந்த, கலஹதுவா மற்றும் மருதானை வீதி ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மேலும், ஹுனுபிட்டிய, வெடிகந்த, வெவெல்துவ, பிரஞ்சுவத்த, கிரிபத்கொட புதிய வீதி, பதிலியதுடுவ வீதி மற்றும் தலுபிட்டிய வீதியில் இருந்து அக்பர் டவுன் பாலம் வரை நீர் விநியோகம் தடைப்படும்.

களனி, பிரஞ்சுவத்த வீதி மற்றும் சரசவி மாவத்தையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...