கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஐந்தாவது முறையாக குடியரசு பெரஹெர, நாளை கண்டியில் நடைபெறவுள்ளது.
75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.
நாளை மாலை 6.30 மணிக்கு கண்டி மங்களகூடத்தில் இருந்து ஆரம்பிக்கும் பெரஹெர, தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி வழியாக ரஜ வீதியில் பிரவேசித்து மீண்டும் தலதா மாளிகையை வந்தடையும் என தலதா மாளிகை இணைப்பாளர் மற்றம் கலாசார அதிகாரி ஜெயம்பதி வெத்தகல தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இம்முறை பெரஹெர ஏற்பாடு செய்யப்படுவதுடன், பெரஹராவை காணவரும் மக்களுக்காக கண்டி பெரஹரா வீதியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.