follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசட்டத்தினுடன் மோதுபவர்களுக்கு தண்டனை நிச்சயம்

சட்டத்தினுடன் மோதுபவர்களுக்கு தண்டனை நிச்சயம்

Published on

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் வேட்பாளர்களின்,அமைப்பாளர்களின் மனநிலையை சீர்குலைப்பது, தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது என்பது அரசியல் அல்ல எனவும், இது ஓர் அரசியல் தந்திரம் என்ற போதிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்முறை அரசியலமைப்பின் அடிப்படை உரிமையை மீறி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு முரணான தேர்தல்களை தடுத்து நிறுத்தும் சதியை மக்கள் சக்தியுடன் முறியடித்து, இந்த சதியில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதேபோல், இத்தேர்தலில், மக்கள் மாற்று அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, இரண்டாவது தடவையாகவும் வங்குரோந்து நிலையை உருவாக்குவதாக அத்தெரிவு அமையாதிருக்க வேண்டும் எனவும், தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்தும் கோட்டாபய ராஜபக்ச ஏற்படுத்திய குழப்பத்திலிருந்தும் விடுபட மாற்று அணி தீர்வு என்ற பெயரில் மீண்டும் முன்வந்துள்ளதாகவும் ,இந்நேரத்தில் நாட்டுக்கு டொலர்களை பெறும் திறமையான குழுவே தேவைப்பாடாக இருப்பதால் மக்கள் சரியான முடிவை எடுக்காவிட்டால் நாடு மேலும் அழிந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு ராஜபக்சர்களே என அவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்தது ஐக்கிய மக்கள் சக்தி அல்ல எனவும் மக்கள் விடுதலை முன்னணியே அவர்களை ஆட்சியில் அமர்த்தியதாகவும், இவ்வாறான திருடர்களிடம் சிக்காமல், எவ்வாறேனும் தேர்தலை நடத்தி
நாட்டை திருடிய திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...