follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகல்வியியல் கல்லூரிகளுக்கான மேன்முறையீடு விண்ணப்பம் 28 வரை ஏற்பு

கல்வியியல் கல்லூரிகளுக்கான மேன்முறையீடு விண்ணப்பம் 28 வரை ஏற்பு

Published on

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைக்கான மேன்முறையீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2019 /2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதுடன், குறித்த நேர்முக பரீட்சைகள் தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய ஆண்டு, புதிய பாடத்திட்டம், அல்லது பழைய பாடத்திட்டம் என்பதை அதில் குறிப்பிடல் வேண்டும்.

மேல்முறையீட்டுக்கான காரணம், விண்ணப்பதாரர்களின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, மேன்முறையீடுகள்
கல்விப் பணிப்பாளர்,
கல்வி அமைச்சு,
இசுருபாய,
பத்தரமுல்லை.
என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...