ஜெர்மனில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சம்பள உயர்வு வழங்கக் கோரி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக சுமார் 2,300 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமையினால் வெளிநாட்டு பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.
பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.