ஜெர்மனில் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இரத்து

543

ஜெர்மனில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சம்பள உயர்வு வழங்கக் கோரி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக சுமார் 2,300 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமையினால் வெளிநாட்டு பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here