உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஜூன் மாதம்?

361

2022 ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்தார்.

உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு பெரும்பாலான ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here