follow the truth

follow the truth

May, 17, 2024
Homeவணிகம்சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான 'பயண அட்டை'

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான ‘பயண அட்டை’

Published on

இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பயண அட்டை (Travel Card) வழங்கல் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கைச்சாத்திடும் நிகழ்வு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றது.

இந்த அட்டையை வழங்கிய பின்னர், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலாத் துறையில் பல்வேறு சேவைகளை வழங்குபவர்கள், சுற்றுலாப் பயணிகளைக் கையாள்வதில் சிறப்புச் சலுகைகளைப் பெறுவார்கள்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, தாங்கள் கொண்டு வரும் டாலர்களை வங்கியில் நேரடியாக மாற்றி, சுற்றுலாப் பயணிகள் இந்த அட்டை மூலம் இலங்கையில் பொருட்களையும் சேவைகளையும் பாதுகாப்பாகப் பெறுவது போன்ற தரமான சேவைகளைப் பெற முடியும்.

NDB ((National Development Bank) உடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, NDB சிரேஷ்ட உப தலைவர் சஞ்சய் பெரேரா, உப தலைவர் செயான் ஹமீட், உதவி உபதலைவர் கார்டி அஷான் விக்கிரமநாயக்க மற்றும் NDB கொள்ளுப்பிட்டி கிளையின் முகாமையாளர்குரேஸ் சப்பிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

22ஆவது DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

கொழும்பு 02 நிப்போன் ஹோட்டலில் மே 07ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை யின் கரப்பந்தாட்ட வரலாற்றில்...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising Festival

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A's Advertising Festival அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை, ஏப்ரல் 26,...