இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உக்ரேனுக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் இத்தாலிய பிரதமராக பதவியேற்ற ஜியோர்ஜியா மெலோனி, தனது நாட்டின் ஆதரவை வெளிப்படுத்துவதற்காக உக்ரேனுக்கு விஜயம் செய்யும் விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தார்.
நேட்டோ அங்கத்துவ நாடான இத்தாலி, உக்ரேனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது.
தரையிலிருந்து வானுக்கு ஏவக்கூடிய நடமாடும் ஏவுகணைகளை உக்ரேனுக்கு அனுப்புவதற்கும் இம்மாத முற்பகுதியில் இத்தாலி சம்மதித்திருந்தது.