follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஇந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு

இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு

Published on

பேக்கரி தொழிலுக்கு முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முட்டை ஒன்றின் விலை 48 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த தட்டுப்பாடு காரணமாக அடுத்த வாரத்திற்குள் முட்டை இறக்குமதி செய்யப்படும் என தலைவர் தெரிவித்தார். நாளொன்றுக்கு 55 இலட்சம் முட்டை தேவைப்படுகின்ற போதிலும் 50 இலட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.

அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் சமீலா இந்தமல்கொட தெரிவித்துள்ளார்.

குறித்த முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் கால்நடை வள பிரிவின் அனுமதி கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு மாநகர சபை மேயர் பதவி ஏற்பு

கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தாசர் இன்று (18) பதவி ஏற்றுள்ளார். 2025 உள்ளூராட்சித் தேர்தலில்...

கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தம்

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப்...

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...