follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஅத்தியாவசிய பொதுச் சேவைகள் தொடர்பிலான விவாதம் நாளை

அத்தியாவசிய பொதுச் சேவைகள் தொடர்பிலான விவாதம் நாளை

Published on

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை நாளை (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்தன தலைமையில் நேற்று (21) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இதற்கமைய இந்த விவாதம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. 1978ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய 2319/80 ஆம் இலக்க வர்த்தமானியில் இது குறித்த கட்டளை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், சுகாதாரம் தொடர்பான சேவைகள் யாவும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இரண்டு தனியார் உறுப்பினர் சட்டமூலங்களான இலங்கை கட்டிட சேவைகள் பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் மற்றும் ரதனதிஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன இரண்டாம் மதிப்பீட்டை அடுத்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளன.

அதனையடுத்து, எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு அமைய பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்...

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான அறிவித்தல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என்று...

மக்கள் வங்கியின் 2024 ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (18) ஜனாதிபதி...