இசுறுபாயவுக்கு முன்பாக போராட்டம்

221

இன்றும்(24) இசுறுபாயவுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மாணவர் பிக்குகள் குழுவொன்று கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தி 57 பேரை பொலிஸார் நேற்று (23) கைது செய்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று (24) பிற்பகல் இசுறுபாயவுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here