follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுசுற்றுலா பயணியை பாதணியால் தாக்கிய நபர் விளக்கமறியலில்

சுற்றுலா பயணியை பாதணியால் தாக்கிய நபர் விளக்கமறியலில்

Published on

ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, பாதணியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று பண்டாரவளை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை பகுதியில், ரயில் தண்டவாளத்துக்கு அப்பால் நின்றுக்கொண்டிருந்த ஒருவர், ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வளைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

குறித்த காணொளியை அடிப்படையாக கொண்டு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...