ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, பாதணியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று பண்டாரவளை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை பகுதியில், ரயில் தண்டவாளத்துக்கு அப்பால் நின்றுக்கொண்டிருந்த ஒருவர், ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வளைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
குறித்த காணொளியை அடிப்படையாக கொண்டு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.