follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுசமுர்த்தி உள்ளிட்ட கிராமிய வங்கிகள் ஊடாக கடன் வழங்குவது தொடர்பில் அவதானம்

சமுர்த்தி உள்ளிட்ட கிராமிய வங்கிகள் ஊடாக கடன் வழங்குவது தொடர்பில் அவதானம்

Published on

கிராமிய கடன்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பு தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகியகால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.

உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (23) கூடியபோதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, இலங்கை கொள்கைகள் கற்கை நிறுவனம் மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி வேலைத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வேலைத்திட்டங்கள் ஊடாக நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, இந்த நிவாரணங்களை குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு முறையாக வழங்குவது தொடர்பில் முறைமையொன்றை தயாரிப்பது பற்றி வருகை தந்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

அதேபோன்று, சமுர்த்தி வங்கி உள்ளிட்ட கிராமிய வங்கிகள் ஊடாக கடன்களை வழங்குவது தொடர்பிலும் இந்தபோது கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...