இன்று முதல் ஞாயிறு தோறும் சேவையில் ஈடுபடும் சீதாவக ஒடிஸி

295

சீதாவக ஒடிஸி ரயில் இன்று(26) முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஜனவரி 15ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ‘சீதாவாக ஒடிஸி’ வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான சுற்றுலாத்தலமான சீதாவாகாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த ரயில் தொடங்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here