follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைக் குழு நியமிப்பு

ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைக் குழு நியமிப்பு

Published on

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய ஐந்து தடயவியல் மற்றும் சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய நியமித்தார்

இதன்படி, பேராசிரியர் அசேல மெண்டிஸ், பேராசிரியர் டி.சி.ஆர்.பெரேரா, பேராசிரியர் டி.என்.பி.பெர்னாண்டோ, கலாநிதி சிவசுப்ரமணியம் மற்றும் கலாநிதி ருவன்புர ஆகியோர் விசாரணைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 14ஆம் திகதி இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடுகள் இருந்ததால், அதை விரிவாக ஆய்வு செய்து மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக குறித்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...