follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுவிவசாய அமைச்சிற்குள் விசேட புலனாய்வு பிரிவு

விவசாய அமைச்சிற்குள் விசேட புலனாய்வு பிரிவு

Published on

விவசாய அமைச்சிற்குள் விசேட புலனாய்வுப் பிரிவொன்று இல்லாத காரணத்தினால் குறித்த பிரிவை நிறுவுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாய அமைச்சிற்குள் 13 மேலதிக செயலாளர்கள் பணிபுரிவதாகவும் சிலர் விவசாய மற்றும் நிர்வாக சேவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுக்கு கடமைகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் உட்பட அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்ட சில முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான பிரிவு இல்லாதது மிகவும் கவலைக்குரியது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, இதற்கு மாற்றாக அமைச்சில் தற்போது மேலதிக செயலாளர் மற்றும் தேவையான பணியாளர்களை நியமித்து பிரிவை நிறுவுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...