follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇந்தியா செல்கின்றார் அமைச்சர் அலி சப்ரி

இந்தியா செல்கின்றார் அமைச்சர் அலி சப்ரி

Published on

வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, மார்ச் 02 – 04 வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

புதுடில்லியில் நடைபெறவுள்ள புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, இந்தியா செல்லவுள்ளார்.

இந்த மாநாடு, இந்திய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பார்வையாளர் ஆய்வு அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இம் மாநாட்டின் போது, 2023 மார்ச் 03ஆந் திகதி நடைபெறவுள்ள ‘பிளவுபட்ட உலகை குணப்படுத்துதல்’ (Healing a Divided World) மற்றும் ‘வாக்குறுதியின் பைட் அலகுகள்: தொழில்நுட்பம் எவ்வாறு சமூகங்களை உயர்த்துகின்றது’ (Bytes of Promise: How can Technology Lift Communities) ஆகிய தலைப்புக்களிலான இரண்டு விஷேட குழு விவாதங்களில் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்..

மாநாட்டின் பக்க அம்சமாக, பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வழிகளில் கவனம் செலுத்தும் இருதரப்புக் கலந்துரையாடல்களுக்காக அமைச்சர் பல நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...