follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுஜி20 வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு இன்று ஆரம்பம்

ஜி20 வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு இன்று ஆரம்பம்

Published on

இந்த ஆண்டு ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் இந்தியாவில் அதில் இடம்பெற்ற நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாடு இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இன்றும் நாளையும் நடைபெறவுள்ள மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ரஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் வாவ்ரோவ் உள்ளிட்ட ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.

பணவீக்கம், சர்வதேச பொருளாதார நெருக்கடி, உணவு, எரிபொருள், உரம் விலை உயர்வு, சரக்கு, சேவைகளின் தேவை குறைந்து வருவது போன்றவற்றுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சர்கள் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பன்னாட்டு நட்புறவு, பயங்கரவாத தடுப்பு, உணவு, எரிசக்தி பாதுகாப்பு, பேரிடர் உதவி குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...