follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கி நாடு தழுவிய போராட்டங்கள்..

தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கி நாடு தழுவிய போராட்டங்கள்..

Published on

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

துறைமுகம், பெட்ரோலியம், மின்சாரம், குடிநீர், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்ததுடன், மருத்துவ ரயில்வே ஆசிரியர்கள் மற்றும் அஞ்சல் துறை சங்கங்கள் இதில் சேராமல் போராட்டம் மட்டும் நடத்தப் போவதாக அறிவித்தன.

அதன்படி இன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பணிக்கு புறக்கணிக்கும் தொழில் நடவடிக்கையை துறைமுக தொழிற்சங்கங்கள் மற்றும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ளதுடன், அகில இலங்கை தாதியர் சங்கமும் தொழில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

மேலும், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக ஆசிரியர்கள், தபால் திணைக்கள ஊழியர்கள் கறுப்பு உடை அணிந்தும், கறுப்பு பட்டை அணிந்தும் போராட்டம் நடத்தியதுடன், பல தொழிற்சங்கங்களும் இன்றைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...