follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுநாடளாவிய பணிப்புறக்கணிப்பு தோல்வி - சமன் ரத்னப்பிரிய

நாடளாவிய பணிப்புறக்கணிப்பு தோல்வி – சமன் ரத்னப்பிரிய

Published on

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், குறித்த போராட்டமானது தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய இன்று (01) ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

“.. சில ஊழியர்கள் சுகயீன விடுமுறையில், சில ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல் ரயில்வே துறையில் பணிப்புறக்கணிப்புகள் எதுவும் இல்லை. ரயில் சேவைகள் வழமை போன்று இயங்குகின்றன. அவ்வாறே இலங்கை போக்குவரத்து சபை எந்த பணிப்புறக்கணிப்பையும் மேற்கொள்ளவில்லை. இதிலிருந்து தெளிவாக எமக்கு புலனாகிறது, சில அரசியல் கட்சிகள் பாரியளவிலான பணிப்புறக்கணிப்பினை ஏற்பாடு செய்துள்ளதாக சொல்லித்திரிந்தாலும், அவை சொல்லுமளவு வெற்றியளிக்காத ஒன்றாகி விட்டது.

சில வங்கிகளில் மட்டும் அதன் சேவைகளில் தாமதம் மற்றும் பணிப்புறக்கணிப்பினை காணக்கூடியதாக இருந்தது. துறைமுகத்தினை எடுத்துக் கொண்டால் எந்தப் பணிப்புறக்கணிப்பினையும் மேற்கொள்ளவில்லை. மெதுவாக வேலை செய்யும் வ்செளைத்திட்டம் ஒன்றே இன்று முன்னெடுக்கப்படுகின்றது. மக்களை வீதிக்கு கொண்டுவர நினைத்தார்கள், ஆனால் அது முடியாது போயுள்ளது..” எனத் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...