follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்அதானி குறித்து விசாரிக்க ஒரு சுயாதீன குழு

அதானி குறித்து விசாரிக்க ஒரு சுயாதீன குழு

Published on

இந்திய வர்த்தக சாம்ராஜ்யத்தின் உரிமையாளரான கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுயாதீனக் குழுவை நியமிக்க இந்திய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Hindenburg Research நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்கு விலை மற்றும் நிதி மோசடியில் அதானி குழுமம் தேவையற்ற தலையீடுகளை செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அதானி நிறுவனத்தின் பங்கு விலை வேகமாக சரிந்து பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை அதானி மறுத்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய எதிர்க்கட்சி கூறுகிறது.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி அபே எம். சப்ரே பெயரிடப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அவர்களின் அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...