உலகளாவிய ரீதியில் 18 வயதுக்குட்பட்ட டிக்டொக் செயலி பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க டிக்டொக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 18 வயதுக்குட்பட்ட பயனாளர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மாத்திரமே டிக்டொக் செயலியை பயன்படுத்த முடியும் எனவும் அடுத்த சில வாரங்களில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று டிக்டொக் தெரிவித்துள்ளது.
பயன்பாட்டின் பாதுகாப்பு மற்றும் சில இடுகைகளைத் தள்ள அதன் அல்காரிதத்தை மாற்றும் திறன் குறித்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு அரசாங்கங்களிடையே அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த மாற்றங்கள் வந்துள்ளன.
பயன்பாட்டின் பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை இணைப்பது குறித்தும் உலகளவில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் மாற்றங்கள் செயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.