follow the truth

follow the truth

May, 9, 2025
Homeவிளையாட்டுலியோனல் மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல்

லியோனல் மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல்

Published on

உலகின் முதல்தர நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி குறித்து வெளியாகியுள்ள செய்தி ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது.

அவரது மனைவி Antonella Roccuzzo குடும்பத்திற்கு சொந்தமான ரொசாரியோவில் (Rosario) உள்ள பல்பொருள் அங்காடி தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஒரு குறிப்பை விட்டுச் சென்றனர், அதில் “மெஸ்ஸி நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம், ரொசாரியோவின் மேயர் ஒரு போதைப்பொருள் வியாபாரி, அவரால் உங்களைப் பாதுகாக்க முடியாது.” என எழுதப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, சூப்பர் மார்க்கெட் சேதமடைந்துள்ளது.

அங்கு சந்தேகநபர்களால் 14 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெளிவாக வெளியாகவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் டுபாய்க்கு மாற்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை...

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரோஹித் சர்மா

இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...