follow the truth

follow the truth

July, 9, 2025
Homeவிளையாட்டுலியோனல் மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல்

லியோனல் மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல்

Published on

உலகின் முதல்தர நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி குறித்து வெளியாகியுள்ள செய்தி ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது.

அவரது மனைவி Antonella Roccuzzo குடும்பத்திற்கு சொந்தமான ரொசாரியோவில் (Rosario) உள்ள பல்பொருள் அங்காடி தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஒரு குறிப்பை விட்டுச் சென்றனர், அதில் “மெஸ்ஸி நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம், ரொசாரியோவின் மேயர் ஒரு போதைப்பொருள் வியாபாரி, அவரால் உங்களைப் பாதுகாக்க முடியாது.” என எழுதப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, சூப்பர் மார்க்கெட் சேதமடைந்துள்ளது.

அங்கு சந்தேகநபர்களால் 14 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெளிவாக வெளியாகவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வனிந்து ஹசரங்கப் பங்கேற்பு நிச்சயமல்ல

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரும் அணித்தலைவருமான வனிந்து ஹசரங்க, உபாதையால் நாளை (10) பங்களாதேஷ் அணியுடன்...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பங்களாதேஷூக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி பல்லேகல மைதானத்தில் தற்சமயம் இடம்பெறுகிறது. போட்டியில் நாணய...