போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் கைது

280

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் குஷ் ரக போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபராதுவ, ஹிட்டியனகல தல்பே மற்றும் பிடிதுவ பிரதேசங்களில் ஹபராதுவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் நால்வரும் குஷ் ரக போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 46 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் சந்தேக நபர்களிடமிருந்து 16 கிலோ 338 கிராம் குஷ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here