follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுபோதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் கைது

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் கைது

Published on

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் குஷ் ரக போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபராதுவ, ஹிட்டியனகல தல்பே மற்றும் பிடிதுவ பிரதேசங்களில் ஹபராதுவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் நால்வரும் குஷ் ரக போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 46 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் சந்தேக நபர்களிடமிருந்து 16 கிலோ 338 கிராம் குஷ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...