follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபோதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் கைது

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் கைது

Published on

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் குஷ் ரக போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபராதுவ, ஹிட்டியனகல தல்பே மற்றும் பிடிதுவ பிரதேசங்களில் ஹபராதுவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் நால்வரும் குஷ் ரக போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 46 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் சந்தேக நபர்களிடமிருந்து 16 கிலோ 338 கிராம் குஷ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...