follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஉமா ஓயா திட்டம் ஜூன் மாதம் நிறைவுக்கு

உமா ஓயா திட்டம் ஜூன் மாதம் நிறைவுக்கு

Published on

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் அதனை மக்களிடம் கையளிக்க முடியும் என நீர்ப்பாசன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

உமாஓயா கரடகொல்ல மின் திட்டம் மற்றும் அலிகொத்தரா நீர்த்தேக்கத்தின் கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உமாஓயா பல்நோக்கு திட்டத்தின் பணிகள் 2015 ஆம் ஆண்டிலேயே நிறைவடையவிருந்த போதிலும், கொவிட் பரவல் உள்ளிட்ட காரணங்களால் அதன் பணிகள் தாமதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், இத்திட்டத்தின் 97 வீதமான பணிகள் இதுவரை நிறைவடைந்துள்ளதாகவும், அது மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...