follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஉமா ஓயா திட்டம் ஜூன் மாதம் நிறைவுக்கு

உமா ஓயா திட்டம் ஜூன் மாதம் நிறைவுக்கு

Published on

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் அதனை மக்களிடம் கையளிக்க முடியும் என நீர்ப்பாசன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

உமாஓயா கரடகொல்ல மின் திட்டம் மற்றும் அலிகொத்தரா நீர்த்தேக்கத்தின் கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உமாஓயா பல்நோக்கு திட்டத்தின் பணிகள் 2015 ஆம் ஆண்டிலேயே நிறைவடையவிருந்த போதிலும், கொவிட் பரவல் உள்ளிட்ட காரணங்களால் அதன் பணிகள் தாமதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், இத்திட்டத்தின் 97 வீதமான பணிகள் இதுவரை நிறைவடைந்துள்ளதாகவும், அது மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...