follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஇந்திய - இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

Published on

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சியை எளிதாக்குவதற்கான ஒத்துழைப்பு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முதலீடு, வர்த்தகம் மற்றும் கூட்டாண்மை மேம்பாடு குறித்தும் இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...