பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளான நதுன் சிந்தக என்ற ´ஹரக் கட்டா´ மற்றும் சலிந்து மல்ஷிகா என்ற ´குடு சலிந்து´ ஆகியோர் மடகஸ்காரில் உள்ள விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மடகஸ்காரின் முன்னணி ஊடக வலையமைப்பான இணையத்தளம் ஒன்று நேற்று(06) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் அறிக்கையின்படி, கடந்த மார்ச் முதலாம் திகதி ஹரக் கட்டா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.