follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதேர்தலை தடுக்க இதுவரை 22 விதமான கூட்டு சதிகளை அரசாங்கம் கையாண்டுள்ளது

தேர்தலை தடுக்க இதுவரை 22 விதமான கூட்டு சதிகளை அரசாங்கம் கையாண்டுள்ளது

Published on

இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்க கடுமையாக முயற்சித்து வருவதோடு, தேர்தலை நடத்தாமல் தடுக்க இதுவரை சுமார் 22 விதமான கூட்டு சதிகளை அரசாங்கம் கையாண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில்,தேர்தலை நடத்துவதற்கு நிதியை வழங்காமல் இருப்பதுதான் அரசாங்கத்தின் கடைசி முயற்சியாகத் தெரிவதோடு, இது ஜனநாயகத்தின் நசுக்கும் விடயமாகவும் அமைந்துள்ளது.

இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் இன்றைய பாராளுமன்ற அமர்வில் பல கேள்விகளை முன்வைத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...