எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரயில்வே தொழிற்சங்க கூட்டணியின் இணை அழைப்பாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்தார்.