follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர்

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர்

Published on

சிறந்த உலகை உருவாக்க இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இணைந்து செயல்படும் என்று அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு ஐதராபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியையும் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பார்வையிட்டார்.

போட்டியை பார்த்துவிட்டு அவுஸ்திரேலியா பிரதமர் டுவிட்டரில் கூறியதாவது:

‘கிரிக்கெட் களத்தில் உலகின் தலைசிறந்த வீரர்களாக ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் போட்டியிடுகின்றன. சிறந்த உலகை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும்..’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ட்விட்டரில், ‘நல்ல நண்பருடன் கிரிக்கெட் போட்டியைக் காணும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....