follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஎதிர்வரும் திங்கள் முதல் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

எதிர்வரும் திங்கள் முதல் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

Published on

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொழிற்சங்கம் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி மேற்கு, தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு ஆகிய 04 மாகாணங்களை உள்ளடக்கிய அனைத்து வைத்தியசாலைகளிலும் அன்றைய தினம் காலை 08 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 08 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளையும் உள்ளடக்கிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (10) இடம்பெற்ற விசேட மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...