பெண் ஒருவர் சிறுமியை அடித்து உதைத்து துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய சம்பவம் தொடர்பில், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் பெண் இன்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் மாற்றாந்தாய் ராகமை குருகுலவ பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதுடைய கரவிட்ட ஆராச்சிலாகே தினுஷா எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ராகமை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுமியின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், தந்தையின் இரண்டாவது மனைவியான இந்த பெண்ணுடன் சிறுமி வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.