follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசிறுமியை துன்புறுத்திய பெண் கைது

சிறுமியை துன்புறுத்திய பெண் கைது

Published on

பெண் ஒருவர் சிறுமியை அடித்து உதைத்து துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய சம்பவம் தொடர்பில், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் பெண் இன்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் மாற்றாந்தாய் ராகமை குருகுலவ பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதுடைய கரவிட்ட ஆராச்சிலாகே தினுஷா எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ராகமை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுமியின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், தந்தையின் இரண்டாவது மனைவியான இந்த பெண்ணுடன் சிறுமி வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...