follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசிறுமியை துன்புறுத்திய பெண் கைது

சிறுமியை துன்புறுத்திய பெண் கைது

Published on

பெண் ஒருவர் சிறுமியை அடித்து உதைத்து துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய சம்பவம் தொடர்பில், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் பெண் இன்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் மாற்றாந்தாய் ராகமை குருகுலவ பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதுடைய கரவிட்ட ஆராச்சிலாகே தினுஷா எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ராகமை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுமியின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், தந்தையின் இரண்டாவது மனைவியான இந்த பெண்ணுடன் சிறுமி வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...