ஹட்டன் நகரில் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கடந்த 7ஆம் திகதி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டு இன்று (10) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், சந்தேக நபருக்கு மாவட்ட நீதிபதி ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.