கொழும்பில் ‘பிரின்சஸ் குரூஸ்’ அதி சொகுசு கப்பல்

473

அதி சொகுசு பயணிகள் கப்பலான ‘பிரின்சஸ் குரூஸ்’ கப்பல் இன்று (11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் 1894 சுற்றுலா பயணிகள் மற்றும் 906 பணியாளர்களுடன் தீவை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பலில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் 159 பேர் கொழும்பு துறைமுகத்தை வருகை தந்தவுடன், நாட்டில் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு, இங்கிரிய ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இதேவேளை, குறித்த கப்பல் இன்று இரவு துபாய் துறைமுகத்திற்கு புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here