குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் நாளை (11) மடகஸ்கர் நோக்கி பயணிக்கவுள்ளனர்.
மடகஸ்காரில் கைதுசெய்யப்பட்ட, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களான ‘ஹராக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக மற்றும் குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்சித்த உள்ளிட்ட 8 பேர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று மடகஸ்கார் நோக்கிப் பயணமாகிறது.
மடகஸ்காரின் சட்ட நிலைமைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விசாரணைகளை முன்னெடுக்கும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.