சீனாவின் பிரதமர் லீ கெச்சியாங்கின் இரண்டு தவணைப் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து லீ சியாங் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சீன நாடாளுமன்றத்தில் இன்று அவருக்கு ஆதரவாக 2,936 பேர் வாக்களித்தனர். மூன்று பேர் அவரை எதிர்த்து வாக்களித்தனர்.
சீனாவில் மூன்றாம் தவணையாக அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள சி சின்பிங் (Xi Jinping) தமக்கு ஆதரவான தலைவர்களைத் தலைமைத்துவப் பட்டியலில் இடம்பெறச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.