நீர் வழங்கலும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு

289

வரிக் கொள்கை உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (14) முதல் அனைத்து அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளில் இருந்து விலகுவதற்கு நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் நீர் வழங்கல் தடைப்பட்டுள்ள பகுதிகளில் குறித்த திருத்த பணிகள் சரி செய்யப்படாததால் குறிப்பிட்ட இடங்களில் நீர் விநியோகம் தொடர்ந்தும் தடைபடும் அபாயம் உள்ளதாக இணை அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டண பட்டியல்கள் எடுத்தல், கட்டண பட்டியல்களை வழங்குதல், கட்டணம் வசூலித்தல், புதிய நீர் இணைப்புகள் வழங்குதல் மற்றும் நீர் இணைப்புகளை துண்டித்தல் போன்றவை இடம்பெறாது எனவும் பம்ப் ஸ்டேஷன் நடவடிக்கைகள் மாத்திரமே பராமரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து ஊழியர்களும் இன்று (14) மற்றும் நாளை (15) காலை அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை விட்டு வெளியேறி இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here