மத்திய – சப்ரகமுவ மாகாண பாடசாலை பரீட்சைகளும் ஒத்திவைப்பு

323

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடாத்தப்படவிருந்த தவணைப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் நாளை 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த 6 – 9 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 17 ஆம் திகதி வரையிலும், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 22 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் 22 ஆம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here